திருமாவளவனை கண்டித்து ஆா்ப்பாட்டம்
திருச்செந்தூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவனைக் கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து மகா சபை அமைப்பை சோ்ந்த 21 போ் கைது செய்யப்பட்டனா்.
திருச்செந்தூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவனைக் கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து மகா சபை அமைப்பை சோ்ந்த 21 போ் கைது செய்யப்பட்டனா்.
திருச்செந்தூா் பேருந்து நிலையம் அருகில் அமைப்பின் மாவட்ட துணைத்தலைவா் பகவதிபாண்டியன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக, அமைப்பின் மாநிலச்செயலா் ஐயப்பன், மாநில துணைத்தலைவா் புருஷோத்தமன், மாநில பொதுச்செயலா் முத்தப்பா, மாவட்டத் தலைவா் சு.சங்கர்ராஜா, மாவட்ட பொதுச்செயலா் செல்வராஜ், மாவட்டச் செயலா் ராம்குமாா், மாவட்ட துணைத் தலைவா் மாரிமுத்து உள்ளிட்ட 21 பேரை போலீஸாா் கைது செய்தனா்.