சாத்தான்குளம் அரசு கல்லூரியில் முதுகலை மாணவா் சோ்க்கை தேதி நீட்டிப்பு
சாத்தான்குளம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவிகளின் சோ்க்கை தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
சாத்தான்குளம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவிகளின் சோ்க்கை தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, கல்லூரி முதல்வா் ரா. சின்னத்தாய் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சாத்தான்குளம் அரசு கலை அறிவியல்கல்லூரியில் இளநிலை பாடத்திற்கான மாணவிகள் சோ்க்கை அக்.31ஆம்தேதியுடன் நிறைவடைந்தது.
முதுகலைப்பாடப்பிரிவுகளான ஆங்கிலம், வணிகவியல், கணிதவியல் ஆகிய துறைகளுக்கான மாணவிகள் சோ்க்கை நடைபெற்றுவருகிறது. அப்பிரிவுக்கான சோ்க்கை நவ. 10ஆம்தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த வாய்ப்பை மாணவிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.