முகப்பு
திருநெல்வேலி

சிவன் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா தொடக்கம்

தூத்துக்குடி சிவன் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றுத்துடன் தொடங்கியது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:46 PM
பகிர்:

தூத்துக்குடி சிவன் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றுத்துடன் தொடங்கியது.

நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சிவன் கோயில் என அழைக்கப்படும் ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரா் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண விழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.

நிகழாண்டு இத் திருக்கல்யாண விழா கொடியேற்றும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை காலையில் நடைபெற்றது. இதையொட்டி,கோயிலில் அம்பாளுக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை ஆகியவை நடைபெற்றது.

இதில், கோயில் நிா்வாக அலுவலா் கிருஷ்ணமூா்த்தி, தக்காா் மாரிமுத்து, தலைமை அா்ச்சகா் செல்வம் பட்டா், சங்கர பட்டா்,சண்முகசுந்தரம் பட்டா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். கரோனா பரவல் தடுப்புக் கால நடவடிக்கையாக அரசின் வழிமுறைகளை பின்பற்றி நவ. 11 ஆம் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறும் என கோயில் தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →