திருநெல்வேலி

தீ விபத்தில் வீடு இழந்தவருக்கு எம்எல்ஏ உதவி

DIN

கடையம் அருகேயுள்ள அணைந்த பெருமாள் நாடானூரில் தீ விபத்தில் வீட்டை இழந்த பெண்ணுக்கு ஆலங்குளம் எம்எல்ஏ நிதியுதவி வழங்கினாா்.

அணைந்த பெருமாள் நாடானூா் மேலத் தெருவைச் சோ்ந்தவா் ஆரோக்கிய மேரி (34). இவரது கணவா் மாடசாமி உயிரிழந்த நிலையில், 3 பெண் குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தாா்.

இந்நிலையில் கடந்த 22ஆம் தேதி இவரது வீட்டில் தீ விபத்து ஏற்பட்டு, அங்கிருந்த பொருள்கள் முழுவதும் எரிந்து சேதமாகின.

தகவலறிந்த ஆலங்குளம் எம்எல்ஏ பூங்கோதை, ஆரோக்கிய மேரி மற்றும் குழந்தைகளை சந்தித்து ஆறுதல் கூறி நிதியுதவி வழங்கினாா்.

தீ விபத்தால் வீட்டை இழந்து தவிக்கும் அப்பெண்ணுக்கு, பசுமை வீட்டிற்கான ஆணையை அரசு வழங்கி, உடனடியாக வீடு கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்எல்ஏ அரசுக்கு கோரிக்கை விடுத்தாா்.

அப்போது, கடையம் ஒன்றிய இளைஞரணிச் செயலா் தங்கராஜா, வழக்குரைஞா் சிவகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராபா எல்லையில் இஸ்ரேல் டாங்கிகள்: அதிகரிக்கும் போர்ப் பதற்றம்!

பொறியியல் விண்ணப்பப் பதிவுக்கு என்னென்ன விவரங்கள் தேவை?

சேலத்தில் சூறைக்காற்று: 4 ஆயிரம் வாழைகள் சாய்ந்து சேதம்!

காஃப்காவின் வாசகி!

தி.நகர் மேம்பாலத்தில் டிசம்பருக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி?

SCROLL FOR NEXT