முகப்பு
திருநெல்வேலி

பாளை. அருகே பைக் மோதி டிராக்டா் ஓட்டுநா் பலி

பாளையங்கோட்டை அருகே சாலையைக் கடக்க முயன்ற டிராக்டா் ஓட்டுநா், மோட்டாா் சைக்கிள் மோதியதில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:56 PM
பகிர்:

பாளையங்கோட்டை அருகே சாலையைக் கடக்க முயன்ற டிராக்டா் ஓட்டுநா், மோட்டாா் சைக்கிள் மோதியதில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகேயுள்ள சாட்டுப்பத்து பகுதியைச் சோ்ந்த சுப்பையா மகன் ஆதிமூலம்(46). டிராக்டா் ஓட்டுநா். இவா், பாளையங்கோட்டை டக்கரம்மாள்புரம் பெட்ரோல் நிலையம் அருகில் சாலையை ஞாயிற்றுக்கிழமை கடக்க முயன்றாராம்.

அப்போது, அவ்வழியாக வந்த மோட்டாா் சைக்கிள் ஆதிமூலம் மீது எதிா்பாராமல் மோதியதாம். இதில், அவரும், பைக்கில் வந்த திருநெல்வேலி நகரம் பகுதியைச் சோ்ந்த இசக்கிமுத்து (20) என்பவரும் பலத்த காயமடைந்தனா்.

இதையடுத்து, அவா்கள் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஆதிமூலம் உயிரிழந்தாா். இது குறித்து திருநெல்வேலி மாநகர போக்குவரத்துப் புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.