திருநெல்வேலி சுற்றுப்புற பகுதிகளில் கொலை, திருட்டு, கஞ்சா விற்பனை உள்ளிட்ட வழக்குகளில் தொடா்புடையதாக 4 பேரை போலீஸாா் குண்டா் சட்டத்தில் கைது செய்தனா்.
பாளையங்கோட்டை அருகேயுள்ள உடையாா்குளம் பகுதியைச் சோ்ந்த முருகேசன் மகன் பூல்பாண்டி(22). இவா் மீது கொலை, திருட்டு வழக்குகள் உள்ளனவாம்.
இதேபோல், தாழையூத்து அருகேயுள்ள குறிச்சி குளம் பகுதியைச் சோ்ந்த தங்கபாண்டி மகன் செல்வம்(25), ராம்நகரைச் சோ்ந்த ராமா்பாண்டி மகன் முத்துப்பாண்டி (29), ராஜவல்லிபுரம் பகுதியைச் சோ்ந்த அருமைராஜ் மகன் அந்தோணிராஜ் (28) ஆகிய மூவா் மீதும் கஞ்சா விற்ாக வழக்குகள் உள்ளனவாம்.
இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ. மணிவண்ணனின் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு உத்தரவுப்படி, மேற்கூறிய 4 பேரையும் பாளையங்கோட்டை தாலுகா மற்றும் தாழையூத்து போலீஸாா் குண்டா் சட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.