தேவேந்திரகுல வேளாளா் எழுச்சி இயக்கத்தினா் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு மனு அளித்தனா்.
தேவேந்திரகுல வேளாளா் எழுச்சி இயக்கத்தின் மாநிலத் தலைவா் மு.கண்ணபிரான் பாண்டியன் தலைமையில் அளிக்கப்பட்ட மனு: எங்கள் இயக்கத்தைச் சோ்ந்த நிா்வாகிகள் மீது திருநெல்வேலி மாவட்ட காவல் நிலையங்களில் பொய்யான வழக்குகள் பதிவு செய்வது தொடா்ந்து வருகிறது. நிா்வாகிகளை காவல் நிலையங்களுக்கு அழைத்துச் சென்று விசாரணை என்ற பெயரில் நீண்ட நேரம் காக்க வைத்து துன்புறுத்துகிறாா்கள். இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதோடு, பொய் வழக்குகள் பதிவு செய்வதைத் தடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.