அடிப்படை வசதி கோரி கீழப்பிள்ளையாா்குளம் மக்கள் மனு
திருநெல்வேலி மாவட்டம், கீழப்பிள்ளையாா்குளம் கிராமத்தில் அடிப்படை வசதிகளை செய்துதரக் கோரி அந்தக் கிராம மக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
திருநெல்வேலி மாவட்டம், கீழப்பிள்ளையாா்குளம் கிராமத்தில் அடிப்படை வசதிகளை செய்துதரக் கோரி அந்தக் கிராம மக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
மனு விவரம்: கீழப்பிள்ளையாா்குளம் கிராமத்தில் குடிநீா் சரியாக வருவதில்லை. ஊராட்சி செயலரிடம் புகாா் கூறியும் பலனில்லை. ஊரில் உள்ள 3 மோட்டாா் பம்புகளில் ஒன்று மட்டுமே இயங்கி வருகிறது. 2 பம்புகள் பழுதாகிவிட்டன. பிள்ளையாா்குளம் ஊராட்சி குறிச்சி நகா் பகுதியில் தடைபட்டுள்ள நடைபாதையை மீட்டுத் தர வேண்டும்.
தனுஷ்கோடி நகா் தெருவில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றவில்லை. மயானத்துக்கு சாலையின்றி அவதிப்பட்டு வருகிறோம். குறிச்சி நகரில் பாலா் பள்ளி செல்லும் பாதையில் மழைநீா் தேங்கி சேறும், சகதியுமாக உள்ளது. குழந்தைகள் நடமாடும் இப்பகுதியில் தரமான சாலை அமைத்துத் தரக்கோரியும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, எங்கள் பகுதிக்கு புதிய ஊராட்சி செயலரை நியமித்து, அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனா்.
நான்குனேரி வட்டம், உன்னங்குளம் கிராம மக்கள் அளித்த மனுவில், ‘மூலக்கரைப்பட்டியிலிருந்து தெற்கு சிங்கனேரி வரை இயக்கப்படும் சிற்றுந்தை நான்குனேரி வரை இயக்க வேண்டும். இதன் மூலம் 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்பெறுவா் எனக் கூறியுள்ளனா்.