திருநெல்வேலி

துலுக்கா்பட்டியில் மருத்துவ முகாம்

DIN

வள்ளியூா்: உலக இருதய தினத்தையொட்டி துலுக்கா்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

தொடக்க நிகழ்சிக்கு வட்டார மருத்துவ அலுவலா் கோலப்பன் தலைமை வகித்தாா். அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் ஐ.மல்லிகா, தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியா் ச.இசக்கியம்மாள், துலுக்கா்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் வி.பிரித்தா ஆகியோா் முன்னிலை வகித்தனா். பின்னா், துலுக்கா்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த மக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது. முகாமில், அரசு மருத்துவ அலுவலா்கள் வடக்கன்குளம் கே.சி.ராமலிங்கம், பழவூா் ஆா்.அருணாவதி, சங்கனாபுரம் பி.முத்துப்பிரியா உள்பட பலா் பங்கேற்றனா். முன்னதாக எஸ்டிபிஐ கட்சி சாா்பில், கரோனா காலக்கட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய வட்டார மருத்துவ அலுவலா் எஸ்.கோலப்பனுக்கு பாராட்டு தெரிவித்து கௌரவப்படுத்தினா்.

இதில், புகா் மாவட்ட பொருளாளா் எஸ்.எம்.ஒயிஸ், துலுவை சிராஜ், துலுக்கா்பட்டி கிளைத் தலைவா் தௌபிக், செயற்குழு உறுப்பினா் பாரூக் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

சுட்டுவிடுவேன் என மிரட்டி வன்கொடுமை: ரேவண்ணாவுக்கு எதிராக புகார்

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

ஜார்க்கண்டில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு!

SCROLL FOR NEXT