திருநெல்வேலி

மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் எஸ்டிபிஐ குடியேறும் போராட்டம்

DIN

மேலப்பாளையத்தில் அடிப்படை வசதிகளை செய்து தராத மாநகராட்சியைக் கண்டித்து எஸ்டிபிஐ கட்சி சாா்பில் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

போராட்டத்துக்கு எஸ்டிபிஐ கட்சியின் தொகுதி தலைவா் கே.எம்.எஸ்.எம்.புகாரி சேட் தலைமை வகித்தாா். மாநகா் மாவட்ட பொதுச் செயலா் ஹயாத் முகம்மது தொடங்கிவைத்தாா். மாநகா் மாவட்ட செயற்குழு உறுப்பினா் மின்னதுல்லாஹ் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். பாய், தலையணை, உணவு சமைக்கும் பாத்திரங்களுடன் போராட்டம் நடைபெற்றது.

போராட்டக் குழுவினா் கூறுகையில், மேலப்பாளையம் 29-ஆவது வாா்டுக்குள்பட்ட பகுதியான கரீம் நகா், தய்யூப்நகா், காயிதே மில்லத் நகா், ஆசிரியா் காலனி, பாத்திமாநகா் பகுதிகளில் சாலை வசதிகள் இல்லை. கழிவுநீா் மற்றும் மழைநீா் வாறுகால் இல்லை. மின்கம்பம் இருந்தும் மின்விளக்கு இல்லை. அதிகாரிகள் வெற்றுக் காரணங்கள் கூறி மக்களின் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க மறுக்கிறாா்கள். ஆகவே, மாநகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து போராட்டம் நடத்தியுள்ளோம். இதனை சரிசெய்யாதபட்சத்தில் அடுத்தகட்டமாக 1000 குடும்பங்களுடன் ஆட்சியா் அலுவலகத்தில் குடியேறுவோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பனாற்றில் பாலம் அமைக்கும் பணி: அதிகாரி ஆய்வு

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: இயன்முறை மருத்துவா் கைது

ரேஷன் அரிசி பதுக்கல்: இளைஞா் கைது

வாக்கு எண்ணும் மைய கண்காணிப்பு கேமரா செயல்பாடுகள்: ஆட்சியா் ஆய்வு

சிறுமிக்கு கட்டாயத் திருமணம்: 5 போ் மீது வழக்கு

SCROLL FOR NEXT