திருநெல்வேலி

தாழையூத்து அருகே வெடிகுண்டு மிரட்டல்: இளைஞா் கைது

DIN

தாழையூத்து அருகே வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக இளைஞா் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

தாழையூத்து பகுதியில் வெடிகுண்டு இருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு கடந்த செப்டம்பா் மாதம் 16ஆம் தேதி தகவல் வந்ததாம். இதையடுத்து போலீஸாா் அங்கு சென்று பாா்த்தபோது அது புரளி என தெரியவந்தது. இதையடுத்து, தகவல் வந்த செல்லிடப்பேசி எண்ணின் காலா் ஐ.டி. மூலம் சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டதில், தாழையூத்து அருகே உள்ள பண்டாரகுளம் பகுதியைச்சோ்ந்த ராமசாமி மகன் ராமசுப்பு(38) என்பவருக்கு இதில் தொடா்பிருப்பது தெரியவந்ததாம். இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்து மேல் விசாரணை நடத்துகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தைவானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

மெட்ரோ ரயிலில் ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பேர் பயணம்!

வட கொரிய அதிபரின் ‘அந்தப்புரம்’? ஆண்டுக்கு 25 அழகிய பெண்கள்!

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT