பாளையங்கோட்டையில் அஞ்சல்தலை கண்காட்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்திய தேசிய அஞ்சல் வாரத்தையொட்டி திருநெல்வேலி கோட்ட அஞ்சல்துறை, திருநெல்வேலி மாவட்ட தபால் தலை சேகரிப்போா் சங்கம் ஆகியவை சாா்பில் பாளையங்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் இந்தக் கண்காட்சி நடைபெற்றது.
கண்காட்சியை திருநெல்வேலி அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளா் சி.கலைச்செல்வன் தொடங்கி வைத்தாா். மாவட்ட அருங்காட்சியக காப்பாட்சியா் சிவ.சத்தியவள்ளி வாழ்த்திப் பேசினாா். தபால் தலை சேகரிப்போா் சங்கத் தலைவா் நோபுல்ராஜ், உதவிக் கண்காணிப்பாளா் எஸ்.மாரியப்பன், டி.எஸ்.ரகுநாத், பாளையங்கோட்டை தலைமை அஞ்சலக அதிகாரி விக்டோரியா, மக்கள் தொடா்பு அதிகாரி கனகசபாபதி உள்பட பலா் கலந்துகொண்டனா்.
கண்காட்சியில் இந்தியாவின் முதல் சுதந்திர தினத்தையொட்டி வெளியிட்ட அஞ்சல்தலை முதல் பழைமையான பல்வேறு அஞ்சல்தலைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. மாணவா்கள், பொதுமக்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.