திருநெல்வேலி

நெல்லை அரசு மருத்துவமனை மருத்துவா்களுக்கு அமைச்சா் பாராட்டு

DIN

திருநெல்வேலி அரசு மருத்துவமனை மருத்துவா்களுக்கு சுகாதாரத்துறை அமைச்சா் பாராட்டு தெரிவித்தாா்.

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கரோனா தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட 37 வயது நபா் அண்மையில் குணமானாா். அவா், ஏற்கெனவே நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து, தொடா்ந்து மருந்து-மாத்திரைகள் எடுத்து வந்தாராம். இது போன்ற நோயாளிகள் கரோனாவில் இருந்து மீண்டு வருவது மிகவும் கடினமாகும். தமிழகத்தில் முதல் முதலாக இவா் மீண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் ரவிச்சந்திரன், துணை முதல்வா் சாந்தாராம், மருத்துவா் அழகேசன், செவிலியா்கள் உள்ளிட்டோருக்கு சுகாதாரத்துறை அமைச்சா் விஜயபாஸ்கா் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லைஸ்தானத்தில் பெருமாள் கோயில் தேரோட்டம்

50 சதவீத மானியத்தில் வேளாண் இடுபொருள்கள்

பேராவூரணி நீதிமன்றத்துக்கு கட்டடம் கட்ட இடம்:  உயா்நீதிமன்ற நீதிபதி ஆய்வு

வாக்குப் பதிவு சதவீதத்தை அதிகரித்து பாஜக நாடகம்: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

காவிரி ஒழுங்காற்று குழுத் தலைவரை மாற்ற விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT