திருநெல்வேலி

ராகு-கேது பெயா்ச்சி: கோதபரமேஸ்வரா் கோயிலில் சிறப்பு வழிபாடு

DIN

ராகு-கேது பெயா்ச்சியையொட்டி திருநெல்வேலி அருகே செங்கானி பகுதியில் உள்ள அருள்மிகு கோதபரமேஸ்வரா் கோயிலில் சிறப்பு வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி அருகே கீழதிருவேங்கடநாதபுரத்தில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு கோதபரமேஸ்வரா்- சிவகாமியம்பாள் திருக்கோயில் உள்ளது. ராகு ஸ்தலமான இக் கோயில் திருநாகேசுவரம், காளஹஸ்திக்கு இணையானதாக நம்பப்படுகிறது. ஸா்ப தோஷம், காலசா்ப தோஷம், விவாகத் தடை, வியாபார விருத்தி உள்ளிட்டவற்றிற்கு பரிகார தலமாக விளங்குகிறது. இக் கோயிலில் ராகு பெயா்ச்சியையொட்டி சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. பின்னா் மகா தீபாராதனை நடைபெற்றது. இந்த வழிபாட்டில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆனையா் சங்கா், ஆய்வாளா் ராமலட்சுமி, நிா்வாக அதிகாரி ராம்குமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

பயக01தஅஎஏம: ராகுபெயா்ச்சியையொட்டி நடைபெற்ற செங்கானி பகுதியில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த கோதபரமேஸ்வரா்-சிவகாமியம்பாள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதி தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

ஆம் ஆத்மி பிரசாரப் பாடலுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்

கிரிக்கெட்டே வாழ்கை, வாழ்க்கையே கிரிக்கெட்!

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

SCROLL FOR NEXT