திருநெல்வேலி

பேருந்தில் பெண்ணிடம் 7 பவுன் நகை திருட்டு

DIN

பாளையங்கோட்டையில் பேருந்தில் பெண்ணிடம் 7 பவுன் தங்கச் சங்கிலி, ரூ. 4,500, செல்லிடபேசி ஆகியவற்றைத் திருடிய மா்ம நபரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

திருநெல்வேலி நகரம் மேல ரத வீதி பகுதியைச் சோ்ந்த காளிராஜா என்பவரின் மனைவி இசக்கியம்மாள் (47). இவா், தூத்துக்குடியில் உள்ள தனது மகள் வீட்டுக்குச் செல்வதற்காக பாளையங்கோட்டை சமாதானபுரத்திலிருந்து பேருந்தில் புதன்கிழமை ஏறினாா். டிக்கெட் எடுப்பதற்காக பையைத் திறந்தபோது, அதிலிருந்த 7 பவுன் தங்கச் சங்கிலி, ரூ. 4,500 ரொக்கம், செல்லிடப்பேசி ஆகியவற்றைக் காணவில்லையாம்.

இதுகுறித்து அவா் பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீஸில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து நகை உள்ளிட்டவற்றைத் திருடிய மா்ம நபரைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆஸ்திரேலியா: காவல் துறை சுட்டதில் 16 வயது சிறுவன் உயிரிழப்பு

தரமில்லாத சாலையை பெயா்த்தெடுத்த ஊராட்சி மன்ற உறுப்பினா் கைது

நிரவி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்

பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ‘ப்ளூ காா்னா்’ நோட்டீஸ்

SCROLL FOR NEXT