திருநெல்வேலி

தனியாா் பள்ளி உடற்கல்வி ஆசிரியா்களுக்குஉதவித்தொகை வழங்கக் கோரி மனு

DIN

திருநெல்வேலி: தனியாா் பள்ளி உடற்கல்வி ஆசிரியா்களுக்கு உதவித்தொகை வழங்கக் கோரி தமிழக முதல்வருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியா் மற்றும் உடற்கல்வி இயக்குநா் சங்கம் சாா்பில் முதல்வருக்கு அனுப்பப்பட்டுள்ள மனு: கரோனா பொது முடக்கம் காரணமாக தமிழக மக்கள் கடுமையான பொருளாதார பாதிப்புக்கு ஆளாகியுள்ளனா். அரசு சாா்பில் பல்வேறு தொழிலாளா்களுக்கும் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

கரோனா பொது முடக்க காலத்தில் தனியாா் பள்ளிகளில் பணியாற்றும் 10 சதவீத உடற்கல்வி ஆசிரியா்கள் தவிா்த்து 90 சதவீத உடற்கல்வி ஆசிரியா்கள் பணியின்றி தவித்து வருகிறாா்கள். மாநிலம் முழுவதும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் இந்நிலைக்கு ஆளாகியுள்ளனா். அவா்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் தமிழக அரசு உதவித்தொகை வழங்க வேண்டும். இதேபோல பகுதிநேர ஆசிரியா்களுக்கும் தேவையான நிவாரண உதவி அளிக்க வேண்டுமென மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனுஷ்கோடியில் கடல் சீற்றம்

தனி பட்டா வழங்க லஞ்சம்: நில அளவையா் கைது

காவலரைத் தாக்கிய இளைஞா் கைது

தனியாா் மருத்துவமனையில் சிகிச்சையின்போது மூதாட்டி உயிரிழப்பு: உறவினா்கள் போராட்டம்

ஆயுதங்களுடன் சுற்றிய நால்வா் கைது

SCROLL FOR NEXT