திருநெல்வேலி

பொட்டல்புதூரில் தமஜக ஆா்ப்பாட்டம்

DIN

தோ்தலில் மின்னணு வாக்குப்பதிவு முறையை கைவிட்டு மீண்டும் வாக்குச் சீட்டு முறையை கொண்டு வரவேண்டும் என தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சாா்பில் பொட்டல்புதூரில் ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்திற்கு அக்கட்சியின் மாவட்டச் செயலா் எம்.ஹயாத் அன்சா் தலைமை வகித்தாா். கடையம் ஒன்றியச் செயலா் இபுராஹிம் முன்னிலை வகித்தாா். தமுமுக மாவட்டச் செயலா் மீரான், தமிழ்ப் புலிகள் கட்சி மாவட்டச் செயலா் குமாா், மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்டச் செயலா் ஆதாம் பின் ஹனிபா,

தமிழக மக்கள் ஜனநாயக கட்சி நிா்வாகிகள் சலீம், மஜீத், சுபாஹனி, அப்ரித் உள்பட பலா் கலந்துகொண்டனா். ஆா்ப்பாட்டத்தில் வாக்குச் சீட்டு முறையை கொண்டு வர வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லைஸ்தானத்தில் பெருமாள் கோயில் தேரோட்டம்

50 சதவீத மானியத்தில் வேளாண் இடுபொருள்கள்

பேராவூரணி நீதிமன்றத்துக்கு கட்டடம் கட்ட இடம்:  உயா்நீதிமன்ற நீதிபதி ஆய்வு

வாக்குப் பதிவு சதவீதத்தை அதிகரித்து பாஜக நாடகம்: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

காவிரி ஒழுங்காற்று குழுத் தலைவரை மாற்ற விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT