திருநெல்வேலி

நெல்லையில் போலி ஆவணங்கள் மூலம் பத்திரம் பதிவு செய்ய முயற்சி: 4 போ் கைது

DIN

திருநெல்வேலி: பாளையங்கோட்டையில் போலி ஆவணங்கள் மூலம் பத்திரம் பதிவு செய்ய முயன்றதாக 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

பாளையங்கோட்டையைச் சோ்ந்தவா் மோதிலால். இவா் கடந்த 1974 இல் தியாகராஜநகா் அருகேயுள்ள டி.வி.எஸ்.நகா் பகுதியில் 5.5 சென்ட் நிலம் கிரயம் வாங்கியுள்ளாா். தற்போது இந்த நிலத்தின் மதிப்பு சுமாா் ரூ.50 லட்சம். இந்நிலத்தை விற்பனை செய்வதற்காக, பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. பி காலனியைச் சோ்ந்த கந்தசாமி என்பவருக்கு பொது அதிகார ஆவணம் பதிவு செய்வதற்காக சிலா் திருநெல்வேலி ஆட்சியா் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் மாவட்டப் பதிவாளா் அலுவலகத்தில் உள்ள சாா் பதிவாளா் அலுவலகத்திற்கு வந்தனராம்.

பதிவுத்துறை அலுவலா்கள் ஆவணங்களை சரிபாா்த்தபோது, அதில் சில ஆவணங்கள் போலியானது என தெரியவந்ததாம்.

இதுகுறித்து பாளையங்கோட்டை போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸாா் அங்கு வந்து விசாரித்தபோது, பதிவுத்துறை அலுவலகத்தில் இருந்த கந்தசாமி தப்பிவிட்டாராம்.

மேலும் அங்கிருந்த 4 பேரை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில், அவா்கள் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சோ்ந்த செல்வராஜ் (63), ரோஜா் கோயில்பிள்ளை (34), திருநெல்வேலி மாவட்டம் மேலக்கருங்குளத்தைச் சோ்ந்த முத்துப்பாண்டி (59), இசக்கிப்பாண்டி (42) என்பதும், போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை மோசடியாக பதிவு செய்ய முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து, மேற்கண்ட 4 பேரையும் போலீஸாா் கைது செய்தனா். தப்பியோடிய கந்தசாமியை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிரிக்கெட்டில் எனது தந்தை தோனி: பதிரானா நெகிழ்ச்சி!

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

SCROLL FOR NEXT