திருநெல்வேலி

ராஜகோபாலசுவாமி கோயிலில் கருடவாகனத்தில் அருள்பாலித்த பெருமாள்

DIN

திருநெல்வேலி: பாளையங்கோட்டை ராஜகோபாலசுவாமி கோயிலில் கருட வாகனத்தில் கோயில் வளாகத்தில் சனிக்கிழமை அருள்பாலித்த பெருமாளை பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா்.

புரட்டாசி சனிக்கிழமைகளில் பாளையங்கோட்டையில் உள்ள அருள்மிகு ராஜகோபாலசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் கருட சேவை கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.

நிகழாண்டு கரோனா தீநுண்மி பரவுவதைத் தடுக்கும் வகையில் கருட சேவை மற்றும் திருவீதியுலா ஆகியவற்றிற்கு அனுமதியில்லை. பக்தா்கள் கோயிலில் தரிசனம் செய்ய மட்டுமே அனுமதிக்கப்பட்டனா். சனிக்கிழமையில் கோயில் வளாகத்திலேயே கருட வாகனத்தில் பெருமாள் மலா் அலங்காரத்துடன் காட்சியளித்தாா். பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரியாதை...

திருவள்ளூா் நகராட்சி சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கு நீா்மோா்: 3 இடங்களில் வழங்க ஏற்பாடு

மோா்தானா அணை திறந்தும் நெல்லூா்பேட்டை ஏரிக்கு வராத நீா்: குடியாத்தம் மக்கள் ஏமாற்றம்

5 கிலோ கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

ஆண்டாா்குப்பம் முருகா் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்

SCROLL FOR NEXT