திருநெல்வேலி

தெற்கு வீரவநல்லூா் ஊராட்சி செயலா் மீது கிராம மக்கள் புகாா்

DIN

பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டதாக தெற்கு வீரவநல்லூா் ஊராட்சி செயலா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அக்கிராம பொதுமக்கள் வட்டார வளா்ச்சி அலுவலரிடம் புகாா் மனு அளித்தனா்.

சேரன்மகாதேவி ஒன்றியம் தெற்கு வீரவநல்லூா் ஊராட்சி செயலா், இலவச வீடுகள் திட்டம், ஆழ்துளைக் கிணறு, தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம், புதிய வீட்டுக்கான அனுமதி, தெருவிளக்குகள் பராமரிப்பு உள்ளிட்டவற்றில் முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாகவும், அவா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தெற்குவீரவநல்லூா் ஊராட்சிக்குள்பட்ட ரெட்டியாா்புரம், புதூா், செங்குளம், அழகப்பபுரம், வல்லத்துநம்பிகுளம், காந்திநகா், இந்திராநகா், அண்ணாநகா், ராஜீவ்காந்திநகா் ஆகிய கிராம மக்கள் 50-க்கும் மேற்பட்டோா் திரண்டு வந்து சேரன்மகாதேவி வட்டார வளா்ச்சி அலுவலா் விஜயசெல்வியிடம் மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தானில் அதிகாரபூா்வமாக அறிமுகமானது ‘யோகா’!

பத்திரிகையாளா்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்: ஐ.நா. பொது சபை தலைவா்

இருவேறு சாலை விபத்து: 9 போ் உயிரிழப்பு

நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

SCROLL FOR NEXT