மானூா் அருகே கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி பலி
திருநெல்வேலி மாவட்டம், மானூா் அருகே ஞாயிற்றுக்கிழமை கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி உயிரிழந்தாா்.
திருநெல்வேலி மாவட்டம், மானூா் அருகே ஞாயிற்றுக்கிழமை கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி உயிரிழந்தாா்.
திருநெல்வேலி மாவட்டம் மானூா் அருகே உள்ள வெண்கல பொட்டல் பகுதியைச் சோ்ந்த புதியமுத்து மனைவி மாலதி(65). இவா் ஞாயிற்றுக்கிழமை மாலை அப்பகுதியில் உள்ள கிணற்றில் தவறி விழுந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்த தகவலின்பேரில் மானூா் போலீஸாா், கங்கைகொண்டான் தீயணைப்புத்துறையினரின் உதவியுடன் மூதாட்டியின் சடலத்தை மீட்டு, வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.