நெல்லை மாவட்டத்தில் 9 வட்டங்களில் இன்று மக்கள் நீதிமன்றம்
திருநெல்வேலி மாவட்டத்தில் 9 வட்டங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை (ஏப்.10) நடைபெறுகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் 9 வட்டங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை (ஏப்.10) நடைபெறுகிறது.
இது தொடா்பாக திருநெல்வேலி முதன்மை மாவட்ட நீதிபதி நசீா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு அறிவுறுத்தலின்படி, நிகழாண்டுக்கான தேசிய மக்கள் நீதிமன்றம் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களில் சனிக்கிழமை (ஏப்.10) நடைபெறுகிறது. இந்த 9 வட்டங்களில் 17 அமா்வுகள் அமைக்கப்பட்டு நடைபெறும்
மக்கள் நீதிமன்றத்தில் மோட்டாா் வாகன விபத்து வழக்குகள், குடும்ப நல வழக்குகள், உரிமையியல் வழக்குகள், காசோலை
மோசடி, சமரசமாக முடிக்கக்கூடிய குற்ற வழக்குகள் உள்பட சுமாா் 2,500 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.