முகப்பு
இந்தியா

ஏஐ மூலம் பிரதமர் மோடியின் படம் தவறாகச் சித்திரிப்பு: ஒருவர் கைது

செய்யறிவு மூலம் பிரதமர் மோடியின் படத்தைத் தவறாகச் சித்திரித்து, பொது ஒழுங்கைச் சீர்குலைத்ததாக ஒருவர் கைது

Updated On : 22 மார்ச், 2026 at 5:53 AM
கைது - பிரதிப் படம்
பகிர்:

செய்யறிவு மூலம் பிரதமர் நரேந்திர மோடியின் படத்தைச் சித்திரித்து தவறாக வழிநடத்தியதாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.

செயற்கை நுண்ணறிவு மூலம் பிரதமர் மோடியின் படத்தைச் சித்திரித்து, அதனை சமூக ஊடகங்களில் வெளியிட்டு, தவறான தகவல்களைப் பரப்பி தவறாக வழிநடத்தியதாகவும், பிரதமர் குறித்த ஏற்கத்தகாத படங்களைப் பதிவிட்டு, பொது ஒழுங்கைச் சீர்குலைப்பதாக காவல்துறையில் புகார் வந்தது.

இதனைத் தொடர்ந்து, தில்லி காவல்துறையின் நடத்திய விசாரணையில், பிகாரை சேர்ந்த ஒருவர்தான் தவறாக வழிநடத்துவது தெரிய வந்தது.

இதனையடுத்து, உள்ளூர் போலீஸாருடன் இணைந்து நடத்திய விசாரணையில் ஏஐ படங்களைச் சித்திரித்து வெளியிட்டது சித்தநாத் குமார் என்பது தெரிய வந்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அதுமட்டுமின்றி, பாஜக பெண் எம்எல்ஏ மற்றும் வெளிநாட்டு பெண் தலைவர் ஒருவரையும் சித்தநாத் குமார் தவறாக சித்திரித்து வெளியிட்டதும் விசாரணையில் தெரிய வந்தது.

மேலும், சித்தநாத்தை கைது செய்த போலீஸார், மேல் விசாரணைக்காக அவரை தில்லிக்கு அழைத்துச் சென்றனர்.

summary

Delhi Police arrests Bihar man for sharing AI-generated obscene images of PM Modi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.