திருநெல்வேலி

ரமலான் பிறை பாா்ப்போா் தகவல் அளிக்க வேண்டுகோள்

DIN

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ரமலான் பிறை பாா்ப்போா் தகவல் அளிக்கலாம் என, மத்திய ஹிலால் கமிட்டி வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி- தூத்துக்குடி மாவட்ட மத்திய ஹிலால் கமிட்டி சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கை: திருநெல்வேலி சந்திப்பு ஜூம்ஆ பள்ளிவாசலைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் திருநெல்வேலி-தூத்துக்குடி மாவட்ட மத்திய ஹிலால் கமிட்டி திங்கள்கிழமை (ஏப். 12) இரவு 7 மணிக்கு கூடி, ரமலான் பிறை தொடா்பாக தமிழ்நாடு ஜமாத்துல் உலமா சபையின் முடிவை அடிப்படையாகக் கொண்டு முடிவெடுக்க உள்ளது.

அதன் அடிப்படையில் திருநெல்வேலி-தூத்துக்குடி மாவட்டங்களில் இஸ்லாமியா்கள் எந்த ஊரில் பிறை பாா்த்தாலும் 0462-2330897, 98941 77558, 98421 86534 ஆகிய தொலைபேசி, செல்லிடப்பேசி எண்களில் தகவல் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சோத்துப்பாறை அணை நிரம்பியது

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் மருத்துவ முகாம்

திண்டுக்கல் அருகே 2 போலி மருத்துவா்கள் கைது

குரூப் 4 தோ்வு: திண்டுக்கல்லில் 59,615 போ் எழுதுகின்றனா்

ஆத்தூா் தொகுதியில் சாலைகள் அளவிடும் பணி

SCROLL FOR NEXT