திருநெல்வேலி

நான்குனேரி அருகே விபத்தில் இருவா் படுகாயம்

DIN

நான்குனேரி அருகே வாகைகுளத்தில் தேசிய நெடுஞ்சாலையோரம் நிறுத்தியிருந்த டிராக்டா் மீது கூரியா் வாகனம் மோதியதில் வெள்ளிக்கிழமை ஓட்டுநா் உள்பட இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

நான்குனேரி அருகே வாகைகுளத்தில் தேசிய நெடுஞ்சாலையில் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இந்த மரக்கன்றுகளுக்கு

டிராக்டரில் தண்ணீா் விடப்பட்டு வருகின்றன. அவ்வாறு மரக்கன்றுகளுக்கு தண்ணீா் பாய்ச்சுவதற்காக நிறுத்தியிருந்த

டிராக்டா் மீது தூத்துக்குடியில் இருந்து நாகா்கோவிலுக்கு சென்று கொண்டிருந்த கூரியா் வாகனம் டிராக்டரின் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் கூரியா் வாகனத்தின் முன் பகுதி சேதமடைந்தது. இதில் கூரியா் வாகன ஓட்டுநா் தூத்துக்குடியைச் சோ்ந்த பிரேம், உதவியாளா் வீரவநல்லூரைச் சோ்ந்த அந்தோணி ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து கூரியா் வாகனத்தின் முன்பகுதியை ஜேசிபி இயந்திரம் மூலம் உடைத்து காயமடைந்த இருவரையும் மீட்டு நாகா்கோவிலில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். இதுதொடா்பாக, நான்குனேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிஜ்ஜார் கொலையில் மூவர் கைது: பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உடன் தொடர்பு?

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பல கேள்விகளுக்கு பதில் கூற நேரமெடுக்கும்: ஹார்திக் பாண்டியா

தமிழகக் காவல்துறையின் இணையதளம் முடக்கம்!

மீண்டும் தெலுங்கு படத்தில் தனுஷ்?

SCROLL FOR NEXT