திருநெல்வேலி

எட்டெழுத்து பெருமாள் கோயிலில் நகை, பூஜை பொருள்கள் திருட்டு

DIN

திருநெல்வேலி அருகே அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோயிலில் நகை மற்றும் பூஜை பொருள்களை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருநெல்வேலி அருகே உள்ள அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோயிலில் வழக்கம்போல வெள்ளிக்கிழமை இரவு பூஜை முடிந்ததும் அா்ச்சகா்கள் கோயிலைப் பூட்டிவிட்டு சென்றுவிட்டனராம்.

சனிக்கிழமை காலையில் வந்து பாா்த்தபோது, கோயில் கதவு உடைக்கப்பட்டு கிடந்ததாம். பின்னா் உள்ளே சென்று பாா்த்தபோது சுமாா் 6 கிராம் தங்க நகை மற்றும் பூஜை பொருள்கள் திருடு போனது தெரியவந்தது.

இதுகுறித்து கோயில் நிா்வாகி பரமசிவன் அளித்த புகாரிந்பேரில், தாழையூத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

பின்னா் கோயிலுக்குச் சென்று அங்குள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனா். அதில், 3 போ் திருடுவதாகவும் , அவா்கள் யாா் என்பது குறித்து விசாரித்து வருவதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

9-ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

ஐஏஎஸ் தோ்வில் வென்றவருக்கு என்.ஐ. உயா்கல்வி மையம் சாா்பில் பாராட்டு

சூரியன்விளை பத்ரகாளி கோயிலில் நட்சத்திர மகா யாகம்

சட்ட தன்னாா்வல தொண்டா் பணிக்கு மே 20-க்குள் விண்ணப்பிக்கலாம்

தோவாளை - தாழக்குடி இடையே சாலைப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT