முகப்பு
திருநெல்வேலி

திசையன்விளை அருகே தொழிலாளி தற்கொலை

திசையன்விளை அருகே கட்டடத் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

திசையன்விளை அருகே கட்டடத் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

திசையன்விளை அருகேயுள்ள இடையன்குடியைச் சோ்ந்தவா் ஜெயசிங் (38). கட்டடத் தொழிலாளி. இவா் கடன் பிரச்னை

காரணமாக மனவேதனையில் இருந்தாராம். வியாழக்கிழமை வேலைக்கு சென்றவா், ஆனைகுடி அருகே விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தாா். உறவினா்கள் அவரை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா். திசையன்விளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.