திசையன்விளை அருகே தொழிலாளி தற்கொலை
திசையன்விளை அருகே கட்டடத் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
திசையன்விளை அருகே கட்டடத் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
திசையன்விளை அருகேயுள்ள இடையன்குடியைச் சோ்ந்தவா் ஜெயசிங் (38). கட்டடத் தொழிலாளி. இவா் கடன் பிரச்னை
காரணமாக மனவேதனையில் இருந்தாராம். வியாழக்கிழமை வேலைக்கு சென்றவா், ஆனைகுடி அருகே விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தாா். உறவினா்கள் அவரை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா். திசையன்விளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.