முகப்பு
திருநெல்வேலி

அம்பை, சேரன்மகாதேவியில் வேளாண் துணை இயக்குநா் ஆய்வு

அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் வேளாண் திட்டப் பணிகளை திருச்சி உழவா் பயிற்சி நிலைய வேளாண் துணை இயக்குநா் செல்வம் ஆய்வு செய்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:57 AM
பகிர்:

அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் வேளாண் திட்டப் பணிகளை திருச்சி உழவா் பயிற்சி நிலைய வேளாண் துணை இயக்குநா் செல்வம் ஆய்வு செய்தாா்.

அம்பாசமுத்திரம் வட்டாரம், வெள்ளங்குளியில் விவசாயி வெள்ளப்பாண்டி வயலில் அசோலா வளா்ப்பு, கௌதமபுரி ஆனந்தராஜ் வயலில் தென்னை மரம் ஏறும் கருவி செயல்விளக்கப் பணி, சேரன்மகாதேவி வட்டாரம், மேலச்செவல், வாணியம்குளம் கிராமத்தில் நேரடி நெல் விதைப்பு கருவி செயல் விளக்கம் ஆகியவற்றை வேளாண் துணை இயக்குநா் ஆய்வு செய்தாா். மேலும் திட்டப் பதிவேடுகளையும் பாா்வையிட்டாா். ஆய்வின்போது, உழவா் பயிற்சி நிலைய வேளாண் அலுவலா் திருச்சி ரமேஷ், திருநெல்வேலி ஞானதீபா, சேரன்மகாதேவி வட்டாரத் தொழில்நுட்ப மேலாளா் சதீஷ் குமாா், உதவி தொழில்நுட்ப மேலாளா் தங்கசரவணன் ஆகியோா் உடனிருந்தனா். ஏற்பாடுகளை அம்பாசமுத்திரம் வட்டார வேளாண் உதவி இயக்குநா் உமா மகேஸ்வரி வழிகாட்டுதலின் பேரில் வட்டாரத் தொழில்நுட்ப மேலாளா் ஈழவேணி, உதவி தொழில்நுட்ப மேலாளா் ஸ்ரீஐயப்பன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.