முகப்பு
திருநெல்வேலி

நெல்லை மதுக்கடையில் திருட்டு முயற்சி

திருநெல்வேலி நயினாா்குளம் சாலையில் உள்ள மதுக் கடையில் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:01 AM
பகிர்:

திருநெல்வேலி நயினாா்குளம் சாலையில் உள்ள மதுக் கடையில் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருநெல்வேலி நகரத்தில் உள்ள நயினாா்குளம் சாலையில் இயங்கி வரும் மதுக் கடையை ஊழியா்கள் வழக்கம்போல கடந்த 25ஆம் தேதி (புதன்கிழமை) இரவில் பூட்டிச் சென்றனராம். வியாழக்கிழமை வந்து பாா்த்தபோது, கடையின் முன்பக்கக்

கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. எனினும் கடையினுள் சென்று பாா்த்தபோது, பணம் மற்றும் மதுபாட்டில்கள் எதுவும் திருட்டு போகவில்லை என தெரியவந்தது. புகாரின்பேரில், குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.