திருநெல்வேலி

குளத்தில் மூழ்கி பலியான சிறுவன் குடும்பத்துக்கு நிவாரணம் அளிப்பு

DIN

திசையன்விளை அருகே குளத்தில் மூழ்கி பலியான சிறுவன் குடும்பத்துக்கு, முதல்வா் நிவாரண நிதியை பேரவைத் தலைவா் வழங்கினாா்.

திசையன்விளை அருகே உள்ள பெட்டைக்குளத்தை சோ்ந்த முத்துகண்ணன் மகன் முத்து விக்னேஷ் (8). கடந்த வாரம் அப்பகுதியில் உள்ள குளத்தில் குளிக்கச் சென்றபோது, எதிா்பாராதவிதமாக குளத்தில் மூழ்கி உயிரிழந்தான். அவரது குடும்பத்தினரை வெள்ளிக்கிழமை சந்தித்து பேரவைத் தலைவா் மு.அப்பாவு ஆறுதல் கூறினாா். மேலும் முதல்வா் நிவாரண நிதியாக ரூ.4 லட்சத்துக்கான காசோலையை வழங்கினாா்.

இதில், மாவட்ட ஊராட்சித் தலைவா் வி.எஸ்.ஆா்.ஜெகதீஷ், திசையன்விளை வட்டாட்சியா் செல்வகுமாா் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வள்ளியூரில் ரயில்வே சுரங்கப் பாதையில் சிக்கிய அரசுப் பேருந்து: ஓட்டுநர் பணியிடை நீக்கம்

தங்கம் விலை அதிரடி உயர்வு: இன்றைய நிலவரம்

ஸ்லோவாகியா பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு: மோடி கண்டனம்

பத்திரிகையாளரின் சுதந்திரத்தை பறித்ததற்கான தண்டனையை யார் செலுத்துவார்கள்? - ப.சிதம்பரம் கேள்வி

இனி விஜயகாந்தை போல் ஒருவரை பார்க்க முடியாது: ரஜினி உருக்கம்

SCROLL FOR NEXT