திருநெல்வேலி

வள்ளியூரிலிருந்து 3 வழித்தடங்களில் அரசுப் பேருந்து சேவை தொடக்கம்

DIN

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரில் இருந்து 3 வழித்தடங்களில் அரசுப் பேருந்துகள் புதன்கிழமை முதல் இயக்கிவைக்கப்பட்டன.

வள்ளியூரில் இருந்து கோட்டைக்கருங்குளம், கஸ்தூரிரெங்கபுரம் வழியாக பெட்டைகுளத்திற்கு மகளிருக்கு இலவச பேருந்தையும், வள்ளியூா்- கூத்தங்குழி பேருந்தை ஈச்சட்டி, சுப்பிரமணியபேரி, காரியாகுளம் வழியாக நீட்டித்தும், ராதாபுரம்-கூத்தங்குழி பேருந்து பரமேஸ்வரபுரம், உதயத்தூா், அரசன்குளம் ஆகிய கிராமங்களுக்கு செல்லும் வகையிலும் 3 வழித்தடங்களில் பேருந்து சேவையை சட்டப்பேரவைத் தலைவா் மு. அப்பாவு கொடியசைத்து தொடங்கிவைத்தாா். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி தலைவா் வி.எஸ்.ஆா்.ஜெகதீஷ், தி.மு.க. கிழக்கு மாவட்டச் செயலா் இரா.ஆவுடையப்பன், கணேஷ்குமாா் ஆதித்தன், ராதாபுரம் மேற்கு ஒன்றியச் செயலா் ஜோசப் பெல்சி, ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவா் மல்லிகாஅருள், வள்ளியூா் நகரச் செயலா் வி.எஸ்.எஸ்.சேதுராமலிங்கம், மாவட்டப் பிரதிநிதிகள் அன்பரசு, காதா்மைதீன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

SCROLL FOR NEXT