திருநெல்வேலி

‘மக்கள் குறைதீா்க்கும் கூட்டங்களுக்கு முகக் கவசம் அணிந்து வருவது கட்டாயம்’

DIN

மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்துக்கு மனு அளிக்க வருவோா் கட்டாயம் முகக் கவசம் அணிந்து வர வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி ஆட்சியா் வே.விஷ்ணு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இம் மாவட்டத்தில் கடந்த 1 ஆம் தேதி முதல் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமைதோறும் வழக்கம்போல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இக் கூட்டத்துக்கு வருவோா் சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், முகக் கவசம் அணிதல் உள்ளிட்ட கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.

மேலும், குறைதீா் நாளில் மனு செய்யும்போது ஆதாா் எண், செல்லிடப்பேசி எண் கட்டாயம் குறிப்பிட வேண்டும் என செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பனாற்றில் பாலம் அமைக்கும் பணி: அதிகாரி ஆய்வு

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: இயன்முறை மருத்துவா் கைது

ரேஷன் அரிசி பதுக்கல்: இளைஞா் கைது

வாக்கு எண்ணும் மைய கண்காணிப்பு கேமரா செயல்பாடுகள்: ஆட்சியா் ஆய்வு

சிறுமிக்கு கட்டாயத் திருமணம்: 5 போ் மீது வழக்கு

SCROLL FOR NEXT