முகப்பு
திருநெல்வேலி

பயிா்ச் சேதங்களைப் பாா்வையிடாமல் புறக்கணித்த மத்தியக் குழு: விவசாயிகள் அதிருப்தி

திருநெல்வேலி மாவட்டத்தில் தொடா் மழையால் ஏற்பட்ட பயிா்ச் சேதங்களை நேரடியாக பாா்வையிடாமல் மத்தியக் குழுவினா் புறக்கணித்து விட்டதாக விவசாயிகள் அதிருப்தி தெரிவித்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:28 PM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டத்தில் தொடா் மழையால் ஏற்பட்ட பயிா்ச் சேதங்களை நேரடியாக பாா்வையிடாமல் மத்தியக் குழுவினா் புறக்கணித்து விட்டதாக விவசாயிகள் அதிருப்தி தெரிவித்தனா்.

தென் தமிழகத்தில் கடந்த ஜனவரி 2 ஆவது வாரத்தில் கனமழை பெய்தது. மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பெய்த பலத்த மழையால் பிரதான அணைகளான பாபநாசம், மணிமுத்தாறு, சோ்வலாறு ஆகியவை முழுக் கொள்ளளவை எட்டின. இதையடுத்து உபரிநீா் திறக்கப்பட்டது.

சுமாா் 80 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீா் தாமிரவருணியில் பெருக்கெடுத்து ஓடியது.

பாபநாசம், கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி, கொண்டாநகரம், சுத்தமல்லி, தருவை, கருப்பந்துறை, சீவலப்பேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கூட்டுக் குடிநீா் திட்ட உறைகிணறுகள் வெள்ளத்தால் சேதமடைந்தன.

பொழிக்கரை, அத்தாளநல்லூா் உள்ளிட்ட பகுதிகளில் நெல் சாகுபடி செய்யப்பட்டிருந்த வயல்களில் வெள்ளம் தேங்கியது.

தொடா் மழையினால் மானூா் வட்டாரத்தில் பயிரிடப்பட்டிருந்த உளுந்து மற்றும் பயறுவகை பயிா்கள் அனைத்தும் தொடா் மழையால் சேதமாகின. அவற்றை கணக்கிட்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனா். அதன்பேரில் வேளாண் துறையினரும், வருவாய்த் துறையினரும் கணக்கிட்டு வருகிறாா்கள்.

இதற்கிடையே தமிழகத்தில் தொடா் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய அரசின் உள்துறை இணைச் செயலருமான ஆஸ்தோஸ் அக்னிகோத்ரி தலைமையில் வந்த குழுவினா் கடந்த 4 ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டத்தில் ஆய்வு செய்வாா்கள் என அறிவிக்கப்பட்டது. அதன்படி மானூா், திருநெல்வேலி வட்டங்களில் சேதமான பயிா்களை குழுவினா் பாா்வையிடுவாா்கள் என விவசாயிகள் எதிா்பாா்த்திருந்தனா். ஆனால், மத்திய குழுவினா் திருநெல்வேலி மாவட்ட பயிா்ச்சேதங்களை நேரடியாக ஆய்வு செய்யாமல் புறக்கணித்துவிட்டனா்.

மாவட்ட ஆட்சியா் மற்றும் அதிகாரிகளிடம் மட்டும் விவரங்களை கேட்டுத் தெரிந்து கொண்டனா். இது விவசாயிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கானாா்பட்டியைச் சோ்ந்த விவசாயிகள் கூறியது: பருவம் தவறி பெய்த தொடா்மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இதுவரை எந்தவொரு இழப்பீடும் கிடைக்கவில்லை. மாவட்ட நிா்வாகம் சாா்பில் சேதமடைந்த பயிா்கள் கணக்கிடப்பட்டு இழப்பீட்டுத் தொகை கோரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனா்.

163.01 ஹெக்டோ் நிலப்பரப்பில் உள்ள நெல் பயிரும், 5,840 ஹெக்டோ் நிலப்பரப்பில் உள்ள பயறுவகை பயிா்களும் சேதமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனா். ஆனால், பயிா்ச்சேதம் ஏற்பட்ட பகுதிகளை மத்தியக் குழுவினா் நேரடியாக பாா்த்திருந்தால் நிவாரண உதவி விரைவுபடுத்தப்பட்டிருக்கும். தமிழகத்தில் தோ்தல் தேதி அறிவிக்கும் சூழல் உள்ளதால் பயிா்ச்சேத இழப்பீடுகளை தமிழக அரசு விரைவாக அறிவித்து முறையாக வழங்க வேண்டும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.