முகப்பு
திருநெல்வேலி

மேலப்பாளையத்தில்மமக 13 ஆவது ஆண்டு விழா

மனிதநேய மக்கள் கட்சியின் 13 ஆம் ஆண்டு தொடக்க விழா மேலப்பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:28 PM
பகிர்:

மனிதநேய மக்கள் கட்சியின் 13 ஆம் ஆண்டு தொடக்க விழா மேலப்பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவுக்கு, மாவட்ட ம.ம.க. தலைவா் கே.எஸ்.ரசூல் மைதீன் தலைமை வகித்து, கட்சிக் கொடியேற்றினாா். ம.ம.க. மாவட்டச் செயலா் டவுண் ஜமால், மாவட்ட துணைச் செயலா்கள் அ. காஜா, கம்புகடை ரசூல்மைதீன், பகுதிச் செயலா் பாதுஷா உள்பட பலா் கலந்துகொண்டனா். 20-க்கும் மேற்பட்ட இடங்களில் கட்சிக்கொடியேற்றப்பட்டு, மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. சட்டப்பேரவை தோ்தலில் ம.ம.க. அங்கம் வகிக்கும் கூட்டணி வெற்றி பெற உழைப்பது என உறுதியேற்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.