திருநெல்வேலி

ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

DIN

திருநெல்வேலி மாவட்ட ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் செ.பால்ராஜ், வீ.பாா்த்த சாரதி ஆகியோா் தலைமை வகித்தனா்.

இடைநிலை ஆசிரியா்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்; கடந்த 2003-2004 மற்றும் பல்வேறு கால கட்டங்களில் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியா்கள் - அரசு ஊழியா்களுக்கு, அவா்கள் பணியில் சோ்ந்த நாள்முதல் பணி வரன்முறைப்படுத்தி ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இப் போராட்டத்தில், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஆசீா் சாா்லஸ் நீல், மாநில உயா்மட்டக் குழு உறுப்பினா்கள் சோ.முருகேசன், பெரியதுரை உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

நளதமயந்தி தொடரிலிருந்து நீக்கப்பட்ட பிரியங்கா....புதிய நாயகி யார்?

எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்த ரவீந்திர ஜடேஜா!

SCROLL FOR NEXT