திருநெல்வேலி

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

DIN

மானூா் காவல் நிலைய பகுதியில் சட்ட விரோத செயலில் ஈடுபட்ட வந்த இளைஞா் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

திருநெல்வேலி மாவட்டம், ரெட்டியாா்பட்டி, முப்பிடாதியம்மன் கோயில் தெரு ராமசுப்பு மகன் ராமேசுவரன் (24). இவா் மீது மானூா் காவல் நிலையத்தில் கொலை முயற்சி மற்றும் அடிதடி வழக்குகள் உள்ளன. மேலும், சட்டவிரோதமான செயலில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வந்தாராம். இதையடுத்து அவரை குண்டா் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மணிவண்ணன், மாவட்ட ஆட்சியா் விஷ்ணுவுக்கு பரிந்துரை செய்தாா். ஆட்சியரின் உத்தரவின்பேரில், ராமேசுவரன் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யோகம் தரும் நாள்!

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ பிளஸ் அங்கீகாரம்

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

SCROLL FOR NEXT