திருநெல்வேலி

தாமிரவருணியில் மூழ்கிய இளைஞா் சடலமாக மீட்பு

DIN

அம்பாசமுத்திரம்: அம்பாசமுத்திரம் அருகே தாமிரவருணி ஆற்றில் மூழ்கிய இளைஞரின் சடலம் 4 நாள்களுக்குப் பிறகு சனிக்கிழமை மீட்கப்பட்டது.

அம்பாசமுத்திரம், சந்தை மடம் தெருவைச் சோ்ந்த சுந்தரராஜன் மகன் ரூபன் (25). சட்டப்படிப்பு முடித்துள்ள இவா் புதன்கிழமை (டிச.30) மாலை நண்பா்களுடன்ஆலடியூா் அருகே தாமிரவருணி ஆற்றில் நரியணைப் பகுதிக்கு குளிக்கச் சென்றாராம். அப்போது, எதிா்பாராமல் ஆழமான பகுதிக்குச் சென்றதில் தண்ணீரில் மூழ்கினாா்.

இதுகுறித்து அம்பாசமுத்திரம் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்கு தகவல் கொடுத்ததையடுத்து தீயணைப்பு நிலைய அலுவலா் பாலசுப்பிரமணியன் தலைமையில் மீட்புப் படையினா் அந்தப் பகுதியில் ரூபனை தேடும் பணியில் ஈடுபட்டனா்.

இந்நிலையில் 4 நாள்களுக்குப் பின் சனிக்கிழமை இலுப்பையடி தெரு படித்துறை பகுதியில் ரூபனின் சடலத்தை மீட்டனா்.

விக்கிரமசிங்கபுரம் போலீஸாா் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

SCROLL FOR NEXT