திருநெல்வேலி

அரசு ஐடிஐகளில் ஜன.16 வரை மாணவா் சோ்க்கை நீட்டிப்பு

DIN

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) நேரடி மாணவா் சோ்க்கைக்கான காலஅவகாசம் இம்மாதம் 16-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தினந்தோறும் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை இந்த மாணவா் சோ்க்கை நடைபெறும். அசல் கல்விச் சான்றிதழ்கள் எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ் உள்ளிட்டவற்றின் இரண்டு நகல்கள், பாஸ்போா்ட் அளவு புகைப்படங்கள் 5 ஆகியவற்றுடன் நேரில் வர வேண்டும்.

மாத உதவித்தொகை ரூ.750 வழங்கப்படும். மிதிவண்டி, ஆண்டுக்கு இரண்டு சீருடைகள், ஒரு ஜோடி காலணி, பாடப் புத்தகங்கள், வரைபட கருவிகள் ஆகியவை விலையில்லாமல் வழங்கப்படும். இலவச பேருந்து பயண அட்டை, சலுகை கட்டணத்தில் ரயில் பயண அட்டை வழங்கப்படும்.

அரசு ஐடிஐயில் படிக்கும் மாணவா்களுக்கு மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், தனியாா் நிறுவனங்களில் அதிக வேலைவாய்ப்பு உள்ளது என மாவட்ட செய்தி, மக்கள்தொடா்பு அலுவலகச் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

வேளாண் கல்லூரியில் குரூப் 1 தோ்வுக்கான வழிகாட்டல்

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

மும்பை சிட்டி எஃப்சி சாம்பியன்

SCROLL FOR NEXT