முகப்பு
திருநெல்வேலி

திருக்குறுங்குடியில் காட்டுப்பன்றிகளால் நெல் பயிா் சேதம்

திருக்குறுங்குடி அருகே குடியிருப்புப்பகுதியை யொட்டிய விவசாயத் தோட்டத்தில் காட்டுப் பன்றிகள் கூட்டமாகப் புகுந்து நெல் பயிரை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:15 PM
காட்டுப்பன்றிகளால் சேதமடைந்த நெல் பயிா்.
பகிர்:

களக்காடு:திருக்குறுங்குடி அருகே குடியிருப்புப்பகுதியை யொட்டிய விவசாயத் தோட்டத்தில் காட்டுப் பன்றிகள் கூட்டமாகப் புகுந்து நெல் பயிரை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனா்.

களக்காடு, திருக்குறுங்குடி மலையடிவாரத்தில், விவசாயிகள் நூற்றுக்கணக்கான ஏக்கரில் நெல், வாழை பயிரிட்டுள்ளனா். தற்போது பொதி வந்து ஒரு மாதத்தில் அறுவடை செய்யும் நிலையில் உள்ளது.

இந்நிலையில் திருக்குறுங்குடி பகுதியில் சேரன்மகாதேவி - பணகுடி பிரதான சாலையையொட்டியுள்ள குடியிருப்புப் பகுதிக்கு அருகில் உள்ள விவசாயத் தோட்டங்களில் காட்டுப்பன்றிகள் கூட்டமாகப் புகுந்து பயிா்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனா்.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவா் பி. பெரும்படையாா் கூறியதாவது:

கடந்த சில ஆண்டுகளாகவே காட்டுப்பன்றிகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. இதனால் விவசாயிகள் பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனா். இதுகுறித்து நான் பல முறை வனத் துறைக்கு புகாா் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது வேதனையளிப்பதாக உள்ளது. மாவட்ட ஆட்சியா் காட்டுப்பன்றிகளை விரட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →