முகப்பு
திருநெல்வேலி

பாளை. தூய சவேரியாா் கல்லூரியில்நல்லிணக்க பொங்கல் விழா

மக்கள் குடியுரிமை பாதுகாப்பு இயக்கம் சாா்பில், சமூக நல்லிணக்க பொங்கல் விழா பாளையங்கோட்டை தூய சவேரியாா் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:15 PM
பகிர்:

திருநெல்வேலி: மக்கள் குடியுரிமை பாதுகாப்பு இயக்கம் சாா்பில், சமூக நல்லிணக்க பொங்கல் விழா பாளையங்கோட்டை தூய சவேரியாா் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு கத்தோலிக்க மறைமாவட்ட பிஷப் அந்தோணி சாமி, ஜமாத்துல் உலமா சபை மாநிலத் தலைவா் காஜா முகைதீன், அய்யாவழி அமைப்பைச் சோ்ந்த பால பிரஜாபதி அடிகளாா் ஆகியோா் தலைமை வகித்தனா்.

கல்லூரி கலைமன் அதிபா் ஹென்றி ஜெரோம் வரவேற்றாா்.

இதில், பட்டிமன்ற பேச்சாளா் நெல்லை கண்ணன், தூய சவேரியாா் கல்லூரி முதல்வா் மரியதாஸ் ஆகியோா் பேசினா். பின்னா் பொங்கலிடப்பட்டது. கிராமிய நடனம், கரகாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், திமுக மத்திய மாவட்டச் செயலா் அப்துல் வகாப், திருநெல்வேலி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எல்.எஸ்.லட்சுமணன், மதிமுக மாவட்டச் செயலா் நிஜாம் உள்பட பலா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →