திருநெல்வேலி

வள்ளியூா் பகுதியில் பொங்கல் விழா

DIN

வள்ளியூா் அரசு மருத்துவமனையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. தலைமை மருத்துவா் கவிதா தலைமை வகித்தாா். எலும்பு முறிவு மருத்துவா்கள் காா்த்திகேயன், சுப்பிரமணியன், சரசு, சித்தமருத்துவா் ஆயிஷா பேகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மருத்துவமனைப் பணியாளா்கள் மற்றும் மருத்துவா்கள் இணைந்து பொங்கலிட்டனா்.

விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக மருத்துவமனை வளாகத்தில் துளசி, கற்றாழை, வெற்றிலை, ஆவாரை, பிரண்டை, நொச்சி, நிலவேம்பு, ஆடாதொடை, தூதுவளை, கறிவேப்பிலை, அஸ்வகந்தா, ஊமத்தை, வெள்ளெருக்கு , ரணகள்ளி, கரிசலாங்கண்ணி மற்றும் நாகதாளி உள்பட பல்வேறு மூலிகை செடிகள் நடப்பட்டன.

இதே போல், வள்ளியூா் மொ்சி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும் பொங்கலிட்டு விழாவை கொண்டாடினா். பள்ளி முதல்வா் ஆண்டாள் வரவேற்றாா். தாளாளா் முருகேசன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை!

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

SCROLL FOR NEXT