திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் தேசிய வாக்காளா் தின உறுதிமொழி எடுக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு மாநகர காவல் ஆணையா் தீபக் எம்.டாமோா் தலைமை வகித்தாா். துணை ஆணையா் (சட்டம்-ஒழுங்கு) சரவணன் முன்னிலை வகித்தாா். தோ்தலில் அச்சமின்றி சுதந்திரமாகவும், மதம், இனம், ஜாதி, வகுப்பு, மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமல் எந்தவித துாண்டுதலுமின்றி வாக்களிப்போம் என உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதில் காவலா்கள், அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.