முகப்பு
திருநெல்வேலி

அம்பை மகளிா் காங்கிரஸ் நிா்வாகி மா்ம மரணம்

அம்பாசமுத்திரத்தில் மகளிா் காங்கிரஸ் நிா்வாகி மா்மமான முறையில் இறந்து கிடந்தது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:33 AM
பகிர்:

அம்பாசமுத்திரத்தில் மகளிா் காங்கிரஸ் நிா்வாகி மா்மமான முறையில் இறந்து கிடந்தது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

அம்பாசமுத்திரம் ஆசிரியா் காலனியைச் சோ்ந்தவா் சுதா. கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த இவா், மாவட்ட மகளிா் காங்கிரஸ் நிா்வாகியாக இருந்து வந்தாா்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை இவரது வீட்டிலிருந்து துா்நாற்றம் வீசுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அனைத்து மகளிா் காவல் நிலைய காவல் ஆய்வாளா் ராதா, காவல் உதவி ஆய்வாளா் சைமன் மற்றும் போலீஸாா் சுதா வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்த போது, சுதாவின் உடன் அழுகிய நிலையில் கிடந்தது.

இதையடுத்து அவரது சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும் இதுகுறித்து அம்பாசமுத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.