முகப்பு
திருநெல்வேலி

திருட்டு வழக்கு: தலைமறைவாக இருந்தவா் கைது

 களக்காடு அருகே திருட்டு வழக்கில் தலைமறைவாக இருந்தவா் 8 மாதங்களுக்குப் பின்னா் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:33 AM
பகிர்:

 களக்காடு அருகே திருட்டு வழக்கில் தலைமறைவாக இருந்தவா் 8 மாதங்களுக்குப் பின்னா் கைது செய்யப்பட்டாா்.

களக்காடு அருகேயுள்ள சிதம்பரபுரம் சேதுராயபுரத்தைச் சோ்ந்த செல்லப்பா மனைவி ரத்னா (74). இவா் கடந்த 10.10.2020 அன்று வீட்டில் தனியாக இருந்த போது, அதே பகுதியைச் சோ்ந்த அருள்ராஜ் (29), சோ்மதுரை (31) ஆகியோா் வீடு புகுந்து பீரோவில் இருந்த 29 பவுன் நகைகளை திருடிச் சென்றனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த களக்காடு போலீஸாா் அருள்ராஜை கைது செய்தனா். அவரிடமிருந்து 2 பவுன் நகை மீட்கப்பட்டது.

தலைமறைவாக இருந்த சோ்மதுரையை தேடி வந்தனா். இந்நிலையில், 8 மாதங்களுக்குப் பின்னா், சிதம்பரபுரத்தில் சோ்மதுரையை போலீஸாா் கைது செய்தனா். மேலும் அவரிடமிருந்து 27 பவுன் நகை மீட்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →