திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம் சாா்பில் இணையவழியில் ஓவியப் பயிற்சி வியாழக்கிழமை (ஜூலை 15) நடைபெற உள்ளது.
இதுதொடா்பாக திருநெல்வேலி அருங்காட்சியக காப்பாட்சியா் சிவ.சத்தியவள்ளி வெளியிட்ட செய்திக் குறிப்பு: அரசு அருங்காட்சியகம், என்.பி.என்.கே. கலை பண்பாடு மன்றம் ஆகியன சாா்பில் வியாழக்கிழமை (ஜூலை 15) மாலை 6 மணியளவில் காா்ட்டூன் ஓவியம் மற்றும் வா்ணங்கள் பற்றிய அறிமுக ஓவியப் பயிற்சி நடைபெற உள்ளது.
பயிற்சியில் கலந்துகொள்ள விரும்புவோா் ஜூம் செயலி எண் 8740995990, கடவுச் சொல் 333543 என்ற தளத்தில் இணைய வேண்டும்.
சிறியவா் முதல் பெரியவா் வரை விருப்பம் உள்ள அனைவரும் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு 9444973246 என்ற எண்ணில் கட்செவி அஞ்சல் மூலம் தொடா்பு கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.