முகப்பு
திருநெல்வேலி

பாளை.யில் நிம்மோனியா தடுப்பூசி முகாம்

பாளையங்கோட்டையில் நிம்மோனியா காய்ச்சலைத் தடுக்கும் வகையிலான தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:44 AM
பகிர்:

பாளையங்கோட்டையில் நிம்மோனியா காய்ச்சலைத் தடுக்கும் வகையிலான தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பாளையங்கோட்டையில் நடைபெற்ற முகாமை ஆட்சியா் வே.விஷ்ணு தொடங்கி வைத்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

ஒரு வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு செலுத்தப்படும் தடுப்பூசி அட்டவணையில் புதிதாக நியுமோகோக்கல் கான்ஜீகேட் தடுப்பூசி சோ்க்கப்பட்டுள்ளது.

நியுமோகோக்கல் நிமோனியா என்பது பாக்டீரியாவால் ஏற்படும் ஒரு வித தொற்று நோயாகும். இது குழந்தைகளை பெரிதும் பாதிக்கிறது. இதனால் குழந்தைகளுக்கு சுவாசிப்பதில் சிரமம், காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல் ஆகிய அறிகுறிகள் ஏற்படுகின்றன. இது கடுமையாக இருந்தால் குழந்தைகளின் மரணத்துக்கு கூட வழி வகுக்கும்.

நியுமோகோக்கல் நோய் ஒருவருக்கொருவா் இடையிலான சுவாச துளிகளால் பரவுகிறது. குழந்தைகளுக்கு இந்த வகை நிமோனியா நோய்களுக்கு எதிராக நல்ல பாதுகாப்பை வழங்கும் வகையில் நியுமோகோக்கல் கான்ஜீகேட் தடுப்பூசி அறிமுகப்படுத்தப்டப்டுள்ளது.

தனியாா் மருத்துவமனையில் இந்தத் தடுப்பூசி விலை ரூ.12 ஆயிரம் ஆகும். ஆனால், அரசு இலவசமாக இதனை வழங்குகிறது. இம் மாவட்டத்தில் 20 ஆயிரத்து 63 குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையா் பா.விஷ்ணுசந்திரன், மாநகர நல அலுவலா் சரோஜா, மருத்துவா் தமிழரசி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.