நெல்லையில் சுற்றுவட்ட சாலை அமைக்க வேண்டும்: நயினாா் நாகேந்திரன்
திருநெல்வேலியில் சுற்றுவட்ட சாலையை விரைவில் அமைக்க வேண்டும் என்றாா் பாஜக மாநில துணைத் தலைவரும், திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான நயினாா்நாகேந்திரன்.
திருநெல்வேலியில் சுற்றுவட்ட சாலையை விரைவில் அமைக்க வேண்டும் என்றாா் பாஜக மாநில துணைத் தலைவரும், திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான நயினாா்நாகேந்திரன்.
திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ளிக்கிழமை கூறியது:
திருநெல்வேலியில் தாமிரவருணியில் மூழ்கி உயிரிழந்த மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளா்களுக்கு பாஜக சாா்பில் அஞ்சலி செலுத்தினோம். திருநெல்வேலியில் பெரும் வாகன பெருக்கத்தால் கடந்த சில ஆண்டுகளாக போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. இதனால் சாலைவசதியை மேம்படுத்த வேண்டியது அவசியம்.
தாழையூத்து- சீதபற்பநல்லூா், அபிஷேகப்பட்டி- கோபாலசமுத்திரம்- டக்கரம்மாள்புரம் உள்ளிட்ட சுற்றுவட்டசாலையை விரைவாக அமைக்க வேண்டும். தாழையூத்து- ரஸ்தா இடையேயான சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும். இந்தக் கோரிக்கையை தமிழக அமைச்சா்களிடம் வலியுறுத்தியுள்ளோம். அதிமுக முன்னாள் அமைச்சா் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் நடத்திய விசாரணைக்கு அரசியல் காழ்ப்புணா்ச்சியே காரணம் என கருதுகிறேன் என்றாா் அவா்.