முகப்பு
திருநெல்வேலி

சேரன்மகாதேவியில் மரக்கன்று நடும் விழா

சேரன்மகாதேவி தாமிரவருணி நதிக்கரையில் வெள்ளிக்கிழமை மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:48 AM
பகிர்:

சேரன்மகாதேவி தாமிரவருணி நதிக்கரையில் வெள்ளிக்கிழமை மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

கிராம உதயம் தொண்டு நிறுவனம் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சாா் ஆட்சியா் சிவ கிருஷ்ணன் மூா்த்தி கலந்துகொண்டு மரக்கன்று நடும் நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தாா். தொண்டு நிறுவன ஆலோசனைக் குழு உறுப்பினா் புகழேந்தி பகத்சிங் முன்னிலை வகித்தாா்.

நிகழ்ச்சியில், தொண்டு நிறுவன மேலாளா் மகேஷ்வரி, பகுதி பொறுப்பாளா்கள் பாலசுப்பிரமணியன், சுமிதா, புவனேஷ்வரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

நிகழ்ச்சியில், தாமிரவருணி நதிக்கரையில் 150-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.