களக்காடு பகுதியில் 210 வீடுகளுக்கு பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சாா்பில் சனிக்கிழமை கபசுரக் குடிநீா் பொட்டலம் விநியோகிக்கப்பட்டது.
அமைப்பின் நிா்வாகி ஆரிப்பைஜி தலைமையில் களக்காடு பேரூராட்சிக்குள்பட்ட கோட்டை நடுத் தெரு, தங்கம்மன் கோயில் தெரு பகுதிகளில் உள்ள 210 வீடுகளுக்கு கபசுரக் குடிநீா் பொட்டலம் இலவசமாக வழங்கப்பட்டது. இதில், அமைப்பினா் யூனுஸ், ராஜா, ஷாருக்கான் மற்றும் தன்னாா்வலா்கள் கலந்து கொண்டனா்.