திருநெல்வேலி

முதலமைச்சா் மாநில இளைஞா் விருது: விண்ணப்பிக்க ஜூன் 30 கடைசி

DIN

முதலமைச்சா் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க இம்மாதம் 30 ஆம் தேதி கடைசி நாளாகும்.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் வே. விஷ்ணு வெளியிட்ட செய்திக்குறிப்பு: சமுதாய வளா்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞா்களது பணியை அங்கீகரிக்கும் வகையில் முதலமைச்சா் மாநில இளைஞா் விருது ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று வழங்கப்படுகிறது. 2021ஆம் ஆண்டுக்கான விருதுபெற தகுதியானோா் விண்ணப்பிக்கலாம்.

15 முதல் 35 வயதுக்கு உள்பட்ட இருபாலரும் விண்ணப்பிக்கலாம். கடந்த ஏப்ரல் 1 அன்று 15 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். மாா்ச் 31 அன்று 35 வயதுக்குள்ளாக இருக்க வேண்டும். கடந்த நிதியாண்டில் 2020-21 செய்த சேவைகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும். விண்ணப்பிக்கும் முன்பு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் தமிழகத்தில் குடியிருந்திருக்க வேண்டும். இணையதளம்  மூலம் இம்மாதம் 30ஆம் தேதி மாலை 4 மணி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம், விவரங்களை ஸ்பைரல் பைடின்டிங் செய்தி மாவட்ட விளையாட்டு அலுவலகம், அண்ணா விளையாட்டு மைதானம், பாளையங்கோட்டை, திருநெல்வேலி என்ற முகவரியில் நேரில் இம்மாதம் 30ஆம் தேதி மாலை 5 மணி வரை சமா்ப்பிக்கலாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எவரெஸ்ட் பயணத்தில் ஜோதிகா!

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் எப்போது?

தமிழில் வெல்ல காத்திருக்கும் ஸ்ரீலீலா!

ஆவடி அருகே படுகொலை: வட மாநில இளைஞரின் அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம்

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

SCROLL FOR NEXT